For Daily Alerts
Just In
மீண்டும் நிலநடுக்கம்
டெல்லி
குஜராத்தில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள, பச்சாவ் பகுதியில் சனிக்கிழமை காலை மீண்டும் பூகம்பம்ஏற்பட்டுள்ளது. இது 5 ரிக்டர் அளவாக இருந்தது.
கட்ச் மாவட்டத்தில் இந்த பச்சாவ் உள்ளது. காலை 8.35 மணிக்கு இந்த நிலநடுக்கம் இருந்தது. பச்சாவ்பகுதியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருந்தது.
ஜனவரி 26-ம் தேதி ஏற்பட்ட பெரும் பூகம்பத்திற்குப் பிறகு அடிக்கடி சிறு அளவில் நிலநடுக்கம் இப்பகுதிகளில்ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 140 சிறு அளவிலான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
யு.என்.ஐ.
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]