For Daily Alerts
Just In
கேரள ஆதிவாசியை மிரட்டிய வீரப்பன்
கோவை:
கேரளக் காட்டில் வீரப்பன் ஆதிவாசி ஒருவரை மிரட்டி அரிசி, பருப்பு வாங்கி வரச் சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த 30ம் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு கேரளக் காட்டுப் பகுதியில் 3 வீடுகள் மட்டுமே உள்ள வரளப்பகுதிக்கு சென்ற வீரப்பன், அய்யப்பன்என்ற ஆதிவாசியின் மனைவியை சிறைப்பிடித்தான். அரிசி உள்பட பல பொருட்களை வாங்கி வந்தபின் அவர்களை விட்டுள்ளான்.
அவர்களுக்கு டீ அளித்த ஆதிவாசியிடம் 5000 ரூபாய் பணம், மற்றும் வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டை கொடுத்துவிட்டு வெள்ளிக்கிழமை வந்துபொருட்களை வாங்கி கொள்வதாகக் கூறியுள்ளான்.
இதுபற்றிய தகவல் போலீசிற்கு தெரிவிக்கப்பட்டு, அதிரடிப்படை அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.ஹெலிகாப்டரில் வாலையாறு மலைப்பகுதியும் கண்காணிக்கப்பட்டது.
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]