இந்திய பிட்ச்களில் மாற்றம் .. ஆட்சேபிக்கிறார் வாஹ்
பெர்த்:
இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடருக்கான மைதானங்களில் விக்கெட்டுகள் பந்துவீச்சிற்கு சாதகமில்லாத வகையில் மாற்றியமைக்கஉத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையெனில் அது கிரிக்கெட் விளையாட்டிற்கே கேடாக அமையும் என்று ஆஸ்திரேலியக் கேப்டன் ஸ்டீவ் வாஹ்கூறியுள்ளார்.
பெர்த் நகரில், ஞாயிறன்று ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் வாஹ் பேசினார். போட்டிக்கானமைதானங்களில் விக்கெட் அமைக்கும் பணியில் அமைப்பாளர்கள் தலையிடக்கூடாது.
இது தொடர்பான கருத்துக்களை மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்ததாக செய்தியாளர்கள் கூறுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. ஏனெனில்,செய்தியாளர்களிடம் மைதான பராமரிப்பாளர்கள் தொடர்பு கொள்ளவேக் கூடாது.
இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே தோள்பட்டை வலியின் காரணமாக அணியில் இடம் பெறாததால் சுழற்பந்துவீச்சிற்கு சாதகமானஇந்திய மைதானங்களின் தன்மை வழக்கத்திற்கு மாறாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடாது என்று கருதப்படுகிறது.
இவ்வாறு மாற்றி அமைப்பதின் மூலம் தங்கள் அணியின் வெற்றி பாதிக்கப்படாது என்று தெரிவித்த வாஹ், மற்றவர்களின் விருப்பத்திற்கேற்பமைதானங்களை மாற்றியமைப்பது என்பது கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத ஒன்றாகும் என்றார்.