வயர்லெஸ் மூலம் தகவல்

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் தகவல் தொடர்பு முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு விட்டதால் அப்பகுதியில்ரோந்துப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், வயர்லெஸ் மூலம் நிவாரணப்பணிகள், பூகம்பத்தின் தீவிரம் குறித்து மத்திய அரசுக்கும்,வெளிநாட்டுக்கும் தகவல்கள் கொடுத்து வருகின்றனர்.

அகமதாபாத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வரும் பிரிகேடியர் பெனிவால் கூறுகையில், அகமதாபாத் நகரில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள்செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே இரண்டு கமாண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், பொதுமக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து வருகிறார்கள். தகவல் தொடர்பை சீர்படுத்தும் பணியும் மிக வேகமாக நடந்துவருகிறது. பொதுமக்களுக்கு உடனடியாக தொலைபேசி, மின்சாரம் ஆகியவற்றைச் செய்து கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

முதலில் பூஜ் பகுதியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிமாநிலங்களுடன் தொடர்பு கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டது. இந்தியாவில்பூகம்பத்தால் தகவல்தொடர்பு முற்றிலுமாகப் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரும் குஜராத்மாநிலத்தில் பூகம்பம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக உள்ளது.

பூஜ், அகமதாபாத், மோர்பி, ராஜ்கோட், சுரேந்திரநகர் நகர்களிலிருந்து மொபைல் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+