For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் இங்கிலாந்து உதவி

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள 14 அறக் கட்டளைகள் சேர்ந்து குஜராத்துக்கு 15 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இங்கிலாந்து, ஏற்கனவே நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ளது. இப்போது அங்குள்ள 15அறக்கட்டளைகள் சேர்ந்து மீண்டும் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளது.

வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் நிதியுதவியையும் சேர்த்து பிப்ரவரி மாத இறுதிக்குள் 15 மில்லியன் பவுண்டுகள்சேகரித்து குஜராத் மாநிலத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளைகள் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நாங்கள் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு நிதியுதவி செய்யுமாறு பொதுமக்களிடம்வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அவர்கள் கொடுக்கும் கணக்கை வைத்து குஜராத்துக்கு நிதியுதவியளிப்போம்.

அதிக அளவு பணம் வசூலானால் நாங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்குசிகிச்சை அளிக்க உதவி புரிவோம்.

5 மில்லியன் பவுண்டுகள் வசூல் செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளோம். அதைவிட அதிகமாக வசூலானால் அவற்றைக் கொடுப்போம். இங்கிலாந்தில்உள்ள பிராட்போர்டு, பிரிமின்காம், ஏலிங் மற்றும் கவன்ட்ரி நகர்களிலிருந்து அதிக அளவு நிவாரண நிதியுதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

முன்னதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் உள்ள இந்துக் கோவில்களிலிருந்து 50 டன் பெறுமானமுள்ள நிவாரணப் பொருட்கள்,மீட்புப்படையினர் ஆகியோர் குஜராத்துக்குச் சென்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X