அமெரிக்க அதிபரை மிரட்டிய லண்டன் மாணவர்கள்
லண்டன்:
அமெரிக்க அதிபர் புஷ் கொல்லப்படுவார் என்று ஈ-மெயில் அனுப்பியவர்கள் லண்டன் மாணவர்கள் என அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டறிந்தது.
சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு ஈ மெயில் மூலம் இரண்டு மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்கள்யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை செய்யப்பட்டது.
இதையடுத்து, வெள்ளை மாளிகையின் வெப்சைட்டிற்கு வந்த தகவலை புலனாய்வு செய்த சி.ஐ.ஏ கொலை மிரட்டல் செய்தி அனுப்பியவர்கள் மத்திய லண்டனில்உள்ள பிளேக் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எனக் கண்டுபிடித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பள்ளியின் முதல்வர் அவர்களை பள்ளியை விட்டு நீக்கவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் செயலால் விளைந்தவிபரீதங்களை உணர வைத்துள்ளார்.
இதனிடையே, மிர்ரர் நாளிதழுடன் பேசிய அமெரிக்க புலனாய்வுத்துறையின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்க அதிபருக்கு வரும் எத்தகைய மிரட்டலும் தீவிரவிசாரணைக்குட்படுத்தப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications