சீக்கிய முறைப்படி தம்பதியரான வெளிநாட்டினர்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
சீக்கிய மதத்தை தழுவிய கனடாவைச் சேர்ந்த காதலர்கள் சண்டிகரில் சீக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இரு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த கனடாவின் மைக்கேல் பர்டன்(57) பிரன்டா லூயிஸ் (60) இருவருக்கும் திருமணம் செய்து வைத்த கோவிலின்தலைவர் கேசார் சிங், சீக்கிய மதத்தை தழுவியதால் அவர்களுக்கு சீக்கிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது எனக்கு மிகவும்மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
கம்ப்யூட்டர் பயிற்சி நிலையம் ஒன்றிற்கு பணி நிமித்தம் வந்த மைக்கேல் பர்டனின் திருமணத்தில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தவர்கள் அப்பயிற்சி நிலையமாணவர்களே. தங்கள் நாட்டில் இத்திருமணம் ஏற்றுக் கொள்ளப்படுமா என்று தெரியவில்லை என்று கூறும் இத்தம்பதிகள் இங்கு மணம்புரிந்த நாளேதங்களின் திருமண நாளாக கொண்டாடப்படும் என்கின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications