For Daily Alerts
Just In
ப்ளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம்
சென்னை:
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ப்ளஸ் 2 தேர்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாத முதல் வாரத்தில் நடத்தி முடிக்குமாறுகல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ப்ளஸ் 2 தேர்வில் புதிய நடைமுறையை கடைபிடிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதன் படி கமப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் 75 ஒரு மார்க் கேள்விகளுக்குமட்டும் பேப்பரில் விடை எழுதுவதற்கு பதிலாக ஓ.எம்.ஆர் ( கம்ப்யூட்டர் ஷீட்டில் ஓவல் சைசில் இருக்கும்) விடைத்தாளில் எச்.பி.பென்சில் மூலம்விடையளிக்க வேண்டும்.
மற்ற 2 மார்க் மற்றும் 5 மார்க் கேள்விகளுக்கு எப்போதும் போல் பேப்பரில் விடையளிக்க வேண்டும்.
Comments
Story first published: Monday, February 5, 2001, 5:30 [IST]