ஹூரியத்திற்கு விசா கோருகிறது பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

காஷ்மீரில் அமைதி திரும்ப ஹூரியத் அமைப்பு செய்யும் முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர்கள் பாகிஸ்தான் வர இந்தியா விரைவில் அனுமதிதரவேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா அறிவித்த போர் நிறுத்தத்தினால் நிலவும் சுமுகமான சூழ்நிலையில், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மூன்று கட்ட திட்டம் ஒன்றினை காஷ்மீர்குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய சத்தார் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த இரண்டு மாதமாக அமலில் இருந்த சண்டைநிறுத்தம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திட்டத்தின்முதல்கட்டப்படி இந்தியா அறிவித்த சண்டை நிறுத்தத்தை ஏற்று பாகிஸ்தானும் சண்டைநிறுத்தம் செய்துள்ளது.

அடுத்த கட்டமாக, இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்காக ஹூரியத் அமைப்பினர்கள் விரைவில் பாகிஸ்தான்வரவேண்டும். அதற்காகவே விரைவில் அவர்களுக்கு விசா வழங்கக் கோருகிறோம்.

அவர்களுடன் விவாதித்த பிறகு காஷ்மீர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய திட்டத்தை இந்தியாவும் பாகிஸ்தானும்பேசி முடிவு செய்யவதே திட்டத்தின் மூன்றாவது கட்டமாகும். இருமாதங்களுக்கு முன்பே இத்திட்டம் குறித்து இந்திய அரசிற்கு தெரிவித்தும் ஹூரியத்அமைப்பிற்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்றார்.

ஜனவரி 15ம் தேதி புறப்படுவதாக இருந்த 5 நபர் ஹூரியத் குழுவிற்கு விசா வழங்கப்படாததால் பயணத்தை ஒத்திவைத்துள்ளது ஹூரியத் அமைப்பு என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+