For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்ச்சில் பாதுகாப்பு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

குஜராத் மாநில அரசு, கட்ச் மாவட்டத்திலுள்ள 40 கிராமங்களை மிகவும் பதட்டமான பகுதிகள் என அடையாளம் கண்டுபிடித்துள்ளது. மிகவும்பதட்டமான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள கிராமங்களில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இருப்பினும்கொள்ளைக்காரர்களாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகளாலும் பிரச்சனைகள் எதுவும் வராமல் இருப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பான்டியா நிருபர்களிடம் கூறுகையில், மிகவும் பதட்டமான பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளபகுதிகளில் கூடுதல் புறக்காவல் போலீஸ் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்தெந்த கிராமங்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது பாதுகாப்புக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையே பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றிலிருந்து நீர் சுரக்க ஆரம்பித்துள்ளது. இங்கிருந்துகிடைக்கும் நீரை சேமித்து வைத்து கட்ச் மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்குப் பயன்படுத்தலாம்.

கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்டும் உயிர்பிழைத்த மக்கள் இந்த நீரைப் பயன்படுத்தலாம். இந்த ஊற்றில் சுரக்கப்பட்ட நீர்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடிப்பதற்கு மட்டுமின்றி பயிர்களைப் பாதுகாக்கவும் இந்த நீரை அதிக அளவில் பயன்படுத்தலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X