தமிழ் இயக்கங்கள் தடை ...வைகோ வருத்தம்
திருச்சி:
தமிழக முதல்வர் தமிழ் இயக்கங்களான தமிழர் தேசிய விடுதலை படை மற்றும் தமிழ் நாடு மீட்பு படைஆகியவற்றை தடை செய்யுமாறு கூறியது தேவையற்றது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ம.தி.மு.க. தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. இந்தியாவின் இறையாண்மையையும்காப்பாற்றும்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும். மீண்டும் தி.மு.க. தலைவர்கருணாநிதிதான் முதல்வராக வருவார். மூன்றாவது அணி அமைப்பது நடக்காத காரியம்.
கருணாநிதி மூன்றாவது அணி அமைவதை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்பது தவறான தகவல். இது போன்றசெய்திகள் தேர்தலில் வெற்றி பெற முடியாது என உணர்ந்தவர்கள் கிளப்பி விடும் புரளிகளாகும்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த கட்சிகள் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதில் ம.தி.மு.க. தீவிரமாகஇருக்கிறது. 5 ஆண்டு ஆட்சியில் பெரும் ஊழல் செய்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. எங்கள் தேர்தல்பிரச்சாரத்தில் இதை முக்கியமாக குறிப்பிடுவோம்.
தே.ஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., த.ரா.கா.விற்கு இடையே நிலவி வரும் பிரச்சனையை கருணாநிதிசுமுகமாக தீர்த்து வைப்பார் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications