உதவிக்கு ஏங்கும் காந்திதாம்
காந்திதாம் (குஜராத்):
குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்கள் ஆகி விட்ட நிலையிலும் கான்ட்லா துறைமுகத்தின் நுழைவாயிலாக இருக்கும் காந்திதாம்மக்களுக்கு இன்னும் நிவாரணப் பொருட்கள் முறையாகக் கிடைக்கவில்லை.
அகமதாபாத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காந்திதாமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் கானஷியாம்பாய் ஓசா என்பவர் கூறுகையில்,பூகம்பத்தில் பூஜ் அதிகமாகப் பாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். அதற்காகப் பாதிக்கப்பட்ட எங்களைப் போன்றவர்களுக்கு உதவாவிட்டால்எப்படி?
பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் எதுவும்கிடைக்கவில்லை. எல்லோரும் ஒட்டு மொத்தமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பூஜ்ஜூக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியுதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் பூஜ்ஜூக்கே வந்து கொண்டிருக்கின்றன. எங்களை யாருமேகண்டு கொள்வதில்லை என்று குறைபட்டுக் கொண்டார்.
இங்கு வாழும் மக்கள் பலர் இன்னமும் பூகம்பம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியிலேயே உள்ளனர். பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபகுதிகளில் பல மாடிக்கட்டிடங்கள், 30 ஹோட்டல்கள் ஆகியவை இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
காந்திதாமில் அண்மையில் திறக்கப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டல் ஹாலிடே இன் கான்ட்லா, ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த ஹோட்டலை மீண்டும்முழுவதுமாகக் கட்டினால்தான் உண்டு. மேலும் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏன் கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.
அரசு அதிகாரிகளை அடித்தால் தான் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று கோபத்துடன் கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.