பதிவு செய்யப்படாத அரசு பஸ் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்படாமல் இயக்கப்பட்டு வந்த அரசுசொகுசு பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ஓடும் தனியார் வாகனங்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு,இன்சூரன்ஸ் தொகை கட்டப்பட்டபின், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு எண்கொடுக்கப்பட்டு பிறகே சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.

இம்மாதிரி செல்லும் வாகனங்களின் லைசென்ஸ் காலம் முடிந்துவிட்டதா அல்லது இன்னும்நிலுவையில் இருக்கிறதா என்பத குறித்து விசாரிக்கப்படும். அதில் குறைபாடுகள்காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பேருந்து, அரசு தேவைக்காகவோ, பொதுமக்கள் சேவைக்காகவோஇயக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்கள் தாங்களாகவே பேருந்துக்குஎண் கொடுத்து, இந்த தகவலை ஆர்.டி.ஓ.அலுவலகத்தில் இந்த வாகனத்திற்கு, இந்த நம்பர்கொடுத்திருக்கிறோம் பதிவு செய்து கொள்ளுங்கள் என கூறப்படுவது வழக்கம். அதன்பின்தான் ஆர்.டி.ஓ. அலுவலகம் அந்த வாகனங்களை முறைப்படி பதிவு செய்து சாலையில்செல்ல அனுமதிக்கும்.

சென்ற மாதம் சென்னை மாநகர போக்குவரத்துத் துறை சார்பில் குளிர்சாதன வசதிகொண்ட இரண்டு நவீன சொகுசு பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்பொன்முடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் மக்களும் சொகுசாக பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் 10நாட்களுக்கு முன் இந்த பேருந்து பிராட்வே பகுதியில் வந்து கொண்டிருந்தபோதுஆர்.டி.ஓ. பறக்கும் படையினரால் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் இந்த பேருந்து இயங்கிவருவது தெரியவந்தது. உடனே இந்த பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த செய்தி உடனடியாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்முடிக்குதெரிவிக்கப்பட்டது. அவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு பறிமுதல் செய்யப்பட்டபேருந்தை விடுவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+