டெல்லி, புதுவை யூனியனுக்கு அதிக அதிகாரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்கள் தங்களுக்கென்று தனியான பொதுக்கணக்கை துவக்கிக் கொள்ள அதிகாரமளிக்க மத்தியஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேசியத் தலைநகர் பிரதேசம் டெல்லி சட்டம் 1991, மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963 ஆகியவற்றில் திருத்தம்கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம் இந்த யூனியன்பிரதேசங்கள் தங்கள் நிதித் தொகுப்பை பயன்படுத்தி கடன்பெற வசதி ஏற்பட்டுள்ளது.தனி பொதுக்கணக்கிற்குஅதிகாரமளிப்பதால் ரிசர்வ் வங்கியில் இந்த யூனியன் பிரதேசங்கள் தனிக்கணக்கு துவக்கி வைத்துக்கொள்ளலாம்
இத்தகவல்களை மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன்தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications