"முதல்வர் அடையாள அட்டை உண்மையானதே
சென்னை:
சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் கொடுத்த முதல்வர் மற்றும் மத்திய மந்திரியின் வாக்காளர் அடையாள அட்டை உண்மையானவை என தமிழகதேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இதுபற்றி சென்னை மாவட்ட கலெக்டர் அளித்த அறிக்கையில் அடையாள அட்டைகள்தயாரித்த எல்காட் நிறுவனத்திலிருந்து திருடப்பட்டனவா அல்லது விநியோகத்திற்காக சென்னை மாநகராட்சியிடம் கொடுத்தபின் திருடப்பட்டனவாஎன்பது குறித்து கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிமுக உறுப்பினர் தனக்கு அவை தபாலில் வந்தன என்றும் அது குறித்த சாட்சியங்கள் இல்லை என்றும் சென்னை கலெக்டரின் விசாரணையில்தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து பதிவேடுகளை சரிபார்த்து தவறிழைத்தவர்கள் பற்றி அறிக்கை தர அதிகாரிகள் கோரப்பட்டுளளனர். தேவைப்பட்டால் போலீஸ்விசாரனைக்கும் உத்தரவிடப்படும் என்றும் சாரங்கி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications