ஜப்பான் உதவி அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கு அவசர கால உதவியாக கூடுதலாக 2.3 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோகை கோனோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் டோக்கியோவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் யோகை கோனோ தெரிவிக்கையில், மனித நேய அடிப்படையில் குஜராத்துக்கு கூடுதலாகநிதியுதவி அளிப்பதாகத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி 2.3 மில்லியன் டாலர்கள் கூடுதலாக அளிக்கப்படும் என்றார்.
ஜப்பான் அரசு ஏற்கனவே, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 103.5 மில்லியன் யென்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications