அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது பா.ம.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இணைந்தது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 1 மணிநேரம் ஆலோசனைநடத்திய பிறகு இந்த முடிவை பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்துபா.ம.க விலக தி.மு.க.வே காரணம்.
அ.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் எங்களை இணைத்து கொண்டுள்ளோம். இது ஒரு தேர்தல்கூட்டணியாகும்.
வாஜ்பாய் அரசுக்கு நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்துள்ளோம். இருப்பினும் இதுதொடர்பாக மதச்சார்பற்ற முன்னணி எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications