வாஜ்பாயை பாக்.கிற்கு அழைக்கிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
துபை:
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இஸ்லாமாபாத் வருமாறு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஷ் முஸாரப் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு அழைப்புவிடுத்துள்ளார்.
கல்ப் நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் காஷ்மீர் விடுதலைக்கு காஷ்மீரிகள் போராடுவதை ஆதரித்த அவர் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும்அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காஷ்மீரில் மட்டும் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை எல்லைக் கோட்டுப்பகுதிக்கும் விரிவுபடுத்தினால் தான் அதற்கான உண்மையான பலன்கிடைக்கும்.
வாஜ்பாய் ஒரு மிதவாதி அவரைச்சுற்றி உள்ளவர்களே போரை விரும்புகின்றனர். காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில்முக்கியமானது தானும் வாஜ்பாயும் சேர்ந்து பேச்சு நடத்துவது என்றும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications