பா.ம.க. விலகலால் பாதிப்பில்லை . பா.ஜ.க.
ஹைதராபாத்:
பாட்டாளி மக்கள் கட்சி விலகியதால் மத்திய அரசிற்கு பாதிப்பில்லை என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.விற்கும் இடையே பிரச்சினையின்காரணமாகவே பா.ம.க. கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி கூறியது போல் கொள்கையற்ற கூட்டணி. அதனால் தான் பா.ம.க விலகியது என்பது தவறு என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து நிலையற்ற கூட்டணி என்று சொல்வது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது.
இதனால் எல்லாம் பாதிக்கப்படாமல் மத்தியில் வாஜ்பாய் அரசு முழு ஆட்சிக் காலமும் நீடிக்கும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் கம்னியூனிஸ்ட் கட்சிகளால் மத்திய அரசை கவிழ்க்க முடியாது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே காங்கிரஸ் பதவிக்குவரமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications