For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அமைச்சர்களின் ஊழல் .. சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி அமைச்சர்கள் அனைவரதுசொத்துக்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதுவைமாநில அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான டி.ராமச்சந்திரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாண்டிச்சேரியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் திமுக அமைச்சர்கள் மீது 10 ஊழ்புகார்களை சுமத்தி விசாரணை நடத்த மாநில ஆளுநர் உத்தரவிட்டார். அதன் மீதானவிசாரணையின் நிலை குறித்து ஆவலாயுள்ளோம்.

இந்த வழக்குகளில் தேவைப்பட்டால், சி.பி.ஐ. விசாரணைக்குக் கூட உத்தரவிடலாம்என்றும் ஆளுநர் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

பாண்டிச்சேரி போலீஸின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி மோகன் நகரில்மூன்று மாடிக் கட்டடத்தில் குண்டுவெடித்தது. இதுகுறித்த மேல் விசாரணையை தொடரபோலீஸாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X