ஆஸி. தொடர் .. இந்திய அணி 19-ம் தேதி அறிவிப்பு
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியஅணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும்
இந்திய கிரிக்கெட் அணி 19-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட்போட்டிகளிலும், ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி மும்பையில் பிப்ரவரி 27-ம் தேதி துவங்குகிறது இதில்விளையாடும் வீரர்கள் 19-ம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மார்ச் மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டெல்லியில் ஆஸ்திரேலியாவைஎதிர்த்து விளையாடும் போர்டு பிரசிடென்ட் அணியும் 19-ம் தேதி அறிவிக்கப்படும்என கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலரும், ஒருங்கிணைப்பாளரான ஜெயவந்த்லேலேயும், தேர்வுக் குழுத் தலைவர் சந்து போர்டேயும் தெரிவித்தனர்.
ஜெயவந்த் லேலே மேலும் கூறுகையில், 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நாக்பூரில்நடைபெற இருக்கும் இந்திய ஏ அணிக்கு வி.வி.எஸ். லட்சுமண் தலைமை வகிப்பார்என கூறினார்.
இந்திய "ஏ அணி:
வி.வி.எஸ். லட்சுமண் (கேப்டன்), சடகோபன் ரமேஷ், சிவ சுந்தர் தாஸ், தினேஷ்மோங்கியா, ஹேமங் பதானி, முகமது கைப், நயன் மோங்கியா, தேபஷிஷ் மொஹந்தி,ஆஷிஷ் நெஹ்ரா, ராகுல் சங்க்வி, ஹர்பஜன் சிங், பாலாஜி ராவ், ககன் கோடா, ஜாவித்ஜமான்.












Click it and Unblock the Notifications