கொலை வழக்கு .. 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
கோவையில், 1997-ம் ஆண்டு லாட்டரி ஏஜென்டை கொலை செய்த வழக்கில் தடை செய்யப்பட்ட அல் -உம்மா இயக்கத்தைச் சேர்ந்த 3 பேருக்குஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1997-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த மதக்கலவரத்தில் செல்வபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (29) என்ற லாட்டரி ஏஜென்ட் அல்- உம்மாஇயக்கத்தைச் சேர்ந்த 9 பேரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விசாரணை முடிந்த பின் இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கி, இரண்டாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தன்தீர்ப்பில் கூறியதாவது:
யாசுதி, நெட்டை இப்ராஹிம், குள்ள இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ஒரு வருட கடுங்காவல் தண்டனையும், ரூ 1,000 அபராதம் விதித்தும்தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலும் இதை ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆனால் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை நீதிபதி விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி எந்த விதமானஅசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications