சீக்கியர்கள் மீது துப்பாக்கி சூடு .. தலைவர்கள் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜம்முவில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சீக்கியர்கள் மீது போலீசார் நடத்தியதுப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தப்படும் என தன்னை சந்தித்த சீக்கிய சமூகபிரதிநிதிகளிடம் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி உறுதி அளித்தார்.

இது குறித்து ரசயான மற்றும் உரத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்சா நிருபர்களிடம்கூறுகையில், துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்ததும் சீக்கிய தலைவர்களுடன்,உயர் அதிகாரிகள் கூட்டத்தை அத்வானி கூட்டினார்.

இந்த கூட்டத்தில் சிரோமணி குருத்துவார பிரபந்த கமிட்டி தலைவர் ஜகதேவ் சிங்தல்வான்டி உட்பட பல சீக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சீக்கியர்கள்மேல் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கும், தீவிரவாதிகளால் 6 சீக்கியர்கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

சீக்கியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள மூன்றாவது தாக்குதல் இது. இது குறித்துஅதிகாரிகளிடமிருந்து விரிவான அறிக்கை கிடைத்ததும் விரிவான கூட்டம் ஒன்றைஅத்வானி நடத்தவுள்ளார்.

நிருபர்களுக்கு பேட்டியளித்த தல்வாடி, ஜம்மு, காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லாவின் அரசு தான் போராட்டம் நடத்திய சீக்கியர்கள் மீது போலீஸ் துப்பாக்கிசூடு நடத்தியதற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.

இந்த குழு தங்கள் அறிக்கையை செவ்வாய்க்கிழமை அத்வானியிடம் அளிப்பதாகஅறிவித்திருந்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+