எர்ஷாத் தேர்தலில் போட்டியிட ஆயுள் தடை
டாக்கா:
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்க தேச முன்ளாள்சர்வாதிகாரி எர்ஷாத் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடைவிதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
வங்கதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதாசிர் ஹுசைன், முகமது அரேசுதீன் அடங்கியபெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
எர்ஷாத் 1982-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி வங்கதேசத்தின் அதிபரானார்.1982முதல் 1990 வரை வங்க தேசத்தின் அதிபராக இருந்தார். மக்கள் இவருக்கு எதிராகபுரட்சி நடத்தியதால் இவர் பதவி பறிபோனது. அதன்பின் 1996-ம் ஆண்டு ஜுன் மாதம்அவரது சொந்த தொகுதியான ராங்பூரிலிருந்து நாடாளுமன்றத்திற்குதேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன் ஆட்சி காலத்தில் மத்திய டாக்காவில் பல மாடிக் கட்டிடம் கட்டியது தொடர்பானஊழல் வழக்கில் வங்க தேச நீதிமன்றம் இவருக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனைவிதித்தது.
தற்போது இவருக்கு வங்கதேச நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இது குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பின் மூலம் எர்ஷாதின் அரசியல் வாழ்க்கைமுடிவுக்கு வந்து விட்டது என கூறினர்.












Click it and Unblock the Notifications