அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுமா காங்.?
நாகர்கோவில்:
பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருப்பதால்அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மறு பரிசீலனை செய்யும் எனதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
பா.ம.க., அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளது. அக் கட்சி இந்தியாவில்தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சி. எனவேஅ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து பேசுவதற்கு தமிழகத்தில்உள்ள மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து பேச டெல்லிசெல்லவிருக்கிறார்கள்.
அப்போது காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணி அமைக்கலாமா என்பது குறித்தும்விவதிக்கப்படும். காங்கிரஸ் கட்சியால் தேர்தலில் தனித்து போட்டியிடும் பலம்பெற்றுள்ளது. ஆனாலும் இறுதி முடிவு கட்சி தலைமையால் எடுக்கப்படும்.
பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது எதிர்பாராதது. இது தமிழகஅரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறினார்.
யு.என்.ஐ.