ஊதியத்தைக் கொடுத்தார் சோனியா
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை அகில இந்திய காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்குகிறார்.
சென்ற மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கானோர்இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்து தவித்துவருகிறார்கள்.
இவர்களுக்கு உலக நாடுகள் பலவும் பல விதமான நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றன. இந்தியாவிலிருந்தும் பல தரப்பட்ட நிவாரண உதவிகளும், நிதி உதவியும்சென்று கொண்டிருக்கின்றன.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி குஜராத் பூகம்பத்திற்கு நிதிஉதவியாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்க முன் வந்துள்ளார்.
இது குறித்து சோனியா காந்தி நாடாளுமன்ற சபாநாயகர் பாலயோகிக்கு எழுதியுள்ளகடிதத்தில் தனது ஒரு மாத சம்பளத்தை உடனடியாக பிடித்து குஜராத் நிவாரண நிதிக்குஅனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications