அனந்தபுரத்தில் ஒரு "ரகளை
திருவனந்தபுரம்:
யானைப் பாகன் குடி மயக்கத்தில் மயங்கி கிடந்ததால் அவரை மீறி யானை தறி கெட்டுஓடி சாலை போக்குவரத்தை தடை செய்து மக்களையும் பெரும் பீதிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவம் பற்றிய விவரம்:
அனில் குமார் என்ற இந்த யானை பட்டோம் என்ற இடத்தில் இரவு 8 மணிக்கு பாகன்ராஜனுடன் சென்று கொண்டிருந்தது. அவர் நல்ல குடிபோதையில் இருந்ததால் யானைஅவரது கட்டுப்பாட்டை மீறி சாலையில் புகுந்தது. அங்கு சாலை போக்குவரத்துதடைப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மிகுந்த சிரமப்பட்டுபோககுவரத்து நெரிசலை சரிபடுத்தினர். குடிபோதையில் இருந்த பாகன் ராஜனையும்விழிக்கச் செய்தனர்.
விழித்தெழுந்த ராஜன், யானையை சரி செய்யும் நோக்கில் அதன் வாலைப் பிடித்தார்.இது யானைக்கு எரிச்சலூட்டியது. ஆனால் அதை உணராத ராஜன், யானையின்தும்பிக்கையை பிடித்தார். மேலும் கோபமடைந்த யானை ராஜனை தள்ளி விட்டுவிட்டுசுறுசுறுப்பாக இருந்த சாலையில் ஓடத் துவங்கியது.
அப்படியே தன்னை வளர்க்கும் சொந்தக்காரர் வீட்டிற்கு சென்றது. அந்த வீட்டின் கதவுபூட்டியிருந்ததால், மீண்டும் நிதானமாக நடந்து சாலைக்கு வந்தது. இப்படி, யானைஅதுபாட்டுக்குச் சுற்றிக் கொண்டிருந்ததால், சாலையில் சென்றவர்கள் பயந்தனர்.
போலீசாரும் வேனில் யானையைப் பின் தொடர்ந்து சென்றனர். போதையில் இருந்தபாகனையும் உடன் அழைத்துச் சென்றனர். பாகனுக்கு இன்னும் போதை முழுமையாகத்தெளியவில்லை.
மக்களை ஒதுங்கிச் செல்லும் படியே அறிவித்துக் கொண்டு சென்ற போலீசார் பாகனைஎழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்தி பலனளிக்கவில்லை. பின்பாகனை மியூசியம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
வேறு பல யானைப் பாகர்களை அழைத்து யானையை சங்கிலியால் கட்டி போடும் படிகேட்டுக் கொண்டனர். ஆனால் சுமார் 6 மணி நேரம் கழித்துத்தான் யானையைப்பிடித்து கட்ட முடிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
குடிபோதையில் இருந்தததால் யானையை கட்டுப்படுத்தத் தவறிய ராஜன் மீது போலீஸ்வழக்கு பதிவு செய்தனர்.
யு.என்.ஐ.