வருகிறது திராவிட சமய சான்றோர் பேரவை
மதுரை:
காஞ்சி சங்கராச்சாரியாரும், மதுரை ஆதினகர்த்தரும் இணைந்து இந்து சமய கலாசாரத்தை காப்பதற்காக "திராவிடர் சமய சான்றோர்பேரவை" என்ற அமைப்பை ஏற்படுத்த உள்ளனர்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சி சங்கர மடத்தின் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இதுகுறித்துக் கூறுகையில், காஞ்சிபுரத்தில் விரைவில்அமையவுள்ள இந்த அமைப்பு கிராமக் கோயில்களின் நிர்வாகம் மற்றும் பூஜைகளைகவனிக்கும்.
கிராமங்களில் பசுக்களை பாதுகாக்க கோசாலை ஒன்று அமைப்பதற்கும், தேவாரம்மற்றும் திருப்புகழ் வகுப்புகள் நடத்துவதற்கும் இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும்என்று தெரிவித்தார்.
இந்த அமைப்பின் நிர்வாகியாக காஞ்சி சுவாமிகளே இருப்பதுடன் உலகமயமாக்கலால்பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில்களை காக்க சுதேசி இயக்கம் ஒன்றையும்ஆரம்பிக்க உள்ளார்.
நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க அதிக அளவில்மென்பொருள் தொழில்நுட்பக்கூடங்கள் மற்றும் தொழில்கள் நிறுவப்பட வேண்டும்என்றும் காஞ்சி சங்கராச்சாரியர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications