ஜெலட்டின் வெடித்ததில் 4 பேர் பலி
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில், கட்டுமானப் பணியில் இருக்கும் இரண்டுமாடிக் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் ஒரு சிறுமிஉட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் ஆந்திரா, சித்தூர் நகருக்கு அருகே உள்ள குப்பம் என்ற இடத்தில்புதன்கிழமை இரவு நடந்தது.
ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒருபெண்மணி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். அருகிலிருந்த கட்டிடம் ஒன்றும்சேதமடைந்தது. இதில் 7 வயது சிறுமி உட்படமேலும் 3 பேர் கொல்லப்பட்டனர்.அவர்களது உடல்கள் இடிபாடுகளிலிருந்து வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராம் நாராண் கூறுகையில்,இந்த பகுதி கல் குவாரி தொழிலுக்கு பிரபலமானதால், இங்கு வசித்து வரும் ரவிஎன்பவர் ரகசியமாக வெடி மருந்துகள் மற்றம் ஜெலட்டின் குச்சிகள் தயாரிப்பில்ஈடுபட்டு வந்துள்ளார்.
குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு பின் ரவி சென்னைக்கு தப்பி சென்று விட்டதாககூறப்படுகிறது. அவரது வீட்டை போலீசார் சோதனையிட்ட போது வெடி மருந்துகள்மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன என கூறினார்,
யு.என்.ஐ.