கை கொடுக்கிறார் கால்பந்து பீலே
ரியோ டி ஜெனிரா(பிரேசில்):
2010ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பிரேசில் நடத்துவதற்கு அந்நாட்டு கால்பந்து பேரவையின் தலைவர் ரிகார்டோ டெக்ஸிராவின்முயற்சிக்கு உதவப் போவதாக முன்னாள் கால்பந்து வீரர் பீலே தெரிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு போட்டியை நடத்த போட்டியிட்ட பிரேசில், டெக்ஸிரா, பீலே இடையிலான பனிப்போரினால் பீலே ஒத்துழைக்காததால் கடைசி நேரத்தில்விலகி கொண்டது.
லாஸ் வேகாஸில் நடந்த 1994 உலகக்கோப்பையை நடத்தும் நாட்டினை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிக்கு பீலேயை சர்வதேச கால்பந்து அமைப்புஅழைக்கவில்லை. அதன் தலைவர், டெக்ஸிராவின் உறவினர் என்பதால் பீலேக்கும் டெக்ஸிராவிற்கும் இடையே பனிப் போர் தொடங்கியது.
இதன் காரணமாக 2006ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த முயற்சித்த டெக்ஸிராவின் முயற்சிக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.
பிரேஸில் பாராளுமன்றம் அந்நாட்டு கால்பந்து அமைப்பில் நடக்கும் குளறுபடிகள், ஊழல் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்டெக்ஸிரா கடந்த திங்களன்று ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பிரேஸில் கால்பந்திற்கு தான் செய்த தீங்குகளை உணர்வதாக தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து ஏற்பட்ட திருப்பம்தான் பீலே , டெக்ஸிராவுடன் ஒத்துழைப்பதாக கூறியது. பீலேயின் இந்த அறிவிப்பை அந்நாட்டு விளையாட்டுத்துறைவல்லுநர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications