40 பேர் காயம்
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 5.3 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 40 க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அகமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அகமதாபாத் மற்றும் கட்ச் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து பத்து முறை பல ரிக்டர்அளவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை எதிர்பார்க்காத பல மாடிக் கட்டிடங்களில் வாழ்ந்து வந்தவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர். திடீரென்று ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தில் 14 பேருக்குக் கால்கள் முறிந்தது. அவர்கள் நகரிலுள்ள வாடிலால் சாராபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். பிறர், நகரிலுள்ள பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய பூகம்பவியல் ஆராய்த்துறையினர் கூறுகையில், கட்ச் மாவட்டத்திலுள்ள பச்சாவ் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பல இடங்களில்நிலநடுக்கம் உணரப்பட்டது. நள்ளிரவில் அகமதாபாத் நகர் உள்பட 3.1, 3.9 என்ற ரிக்டர் அளவில் தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்றுகூறினர்.
யு.என்.ஐ.