கோடி கொடுத்த ஜெயின்கள்
மும்பை:
பிரபல அறக்கட்டளையான கே.பி.சாங்வி அறக்கட்டளை தங்களது உறுப்பினர்களான ஜெயின் சமுகமக்களிடமிருந்து ரூ 5.75 கோடி வசூல் செய்து, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக்கொடுத்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஷா கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாங்விஅறக்கட்டளை சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்திலுள்ள பாவபூரி திரிநாத் தாம் ஜெயின் கோவிலில்நிதிவசூல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறக்கட்டளை டிரஸ்ட்டும், முன்னணி வைர வியாபாரியுமான பாபுபாய் சாங்வி ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.இவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள். ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பிறஉறுப்பினர்கள், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நன்கொடை அளித்தார்கள்.
இதுதவிர குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுக்கவும் அறக்கட்டளைதீர்மானித்துள்ளது என்றார்.
ஜெயின் மதத் தலைவர் ஆச்சாரிய ஸ்ரீ கலா பூரன் சூரிஸ்வராஜ் கூறுகையில், உலகம் முழுவதும் வசித்து வரும்ஜெயின் இன மக்கள் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாராளமாக நன்கொடை அளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, சாங்வி அறக்கட்டளை, குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட 5,000 பசுக்களைத்தத்தெடுத்து ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான கவ்ஷாலா வில் வளர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.