For Daily Alerts
Just In
ஐ.ஐ.டி.க்கு மே 6-ம் தேதி நுழைவுத் தேர்வு
சென்னை:
சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முக்கிய நுழைவுத் தேர்வு ஆகும். இந்த தேர்வில் கலந்து கொள்ளத் தகுதியான மாணவ, மாணவியர் கடந்தடிசம்பர் மாதம் நடந்த நுழைவுத் தேர்வின்போது தேர்வு பெற்றனர். அந்தத் தேர்வில் 1.47 லட்சம் பேர் கலந்துகொண்டனர். தற்போது முக்கிய நுழைவுத் தேர்வில் 20,000 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை தவிர டெல்லி, கல்கத்தா, குவஹாத்தி, கான்பூர், கோரக்பூர், மும்பை ஆகிய நகரங்களில் ஐ.ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 3000 காலியிடங்கள் உள்ளன.
Comments
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]