எங்களை ஒதுக்கினால் .. ஐ.ஜ.தளம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனயாக கூட்டணி தொகுதிபங்கீட்டின் போது, ஐக்கிய ஜனதா தளத்திற்கு தொகுதிகள் ஏதும் ஒதுக்காவிட்டால்நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என அக் கட்சியின் மாநில தலைவர்பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய ஜனதா தளம் 30 தொகுதிகளில் பலம் பெற்றுவெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக விளங்குகிறது.
மத்தியில் தே.ஜ. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கிறோம். எங்களுக்கு கணிசமானசீட்களை தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி கொடுக்கும் என நம்புகிறோம்.
கட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இந்த மாதம் 12-ம் தேதிதிருச்சியில் கூடவிருக்கிறது அப்போது தேர்தல் செயல்பாடுகள் குறித்துமுடிவெடுக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications