பொங்கி எழுந்த தேவதாஸ்
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோரால் சிறை வைக்கப்பட்ட காதலியை சினிமா பாணியில் மீட்டு மணந்து கொண்டார் காதலன்.
சினிமாவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கதாநாயகி வீட்டில் சிறை வைக்கப்படுவார். கதாநாயகன் வீராவேசமாக வந்து வசனம் பேசி கதாநாயகியைகாப்பாற்றி சென்று, தன் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்வார். இது நம் தமிழ் சினிமாவில் வழக்கமாக காணும் காட்சி.
இதே போன்ற நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்துள்ளது. சாத்தான்குளத்தின் சங்கரன் குடியிருப்பில் வசித்து வரும் பால்பாண்டி என்பவரின்மகள் லாவண்யா (19) என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் காதல் விஷயம் லாவண்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்து அவரை வீட்டில் வைத்து பூட்டினர். அவருக்கு திருமண ஏற்பாடும் நடை பெற்றுவந்தது.
இனியும் பொறுத்தால் தன் காதலனை கை பிடிக்க முடியாது என உணர்ந்த லாவண்யா கத்தியால் விரலை கிழித்து, என்னை சிறை வைத்துள்ளனர். எனக்குதிருமண ஏற்பாடு நடக்கிறது. என்னை மீட்டுச் செல்லுங்கள் என ரத்தக் கடிதம் எழுதி தெருவில் வீசி எறிந்தார்.
இந்த விஷயம் நண்பர்கள் மூலம் பன்னீர் செல்வத்தை சென்றடைந்தது. அவர் சினிமா கதாநாயகன் ஸ்டைலில் லாவண்யாவின் வீட்டிற்கு வந்து அவர்பெற்றோர் கண் முன்னே லாவண்யா அடைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்து காதலியை மீட்டுச் சென்றார். பின் நண்பர்கள் உதவியுடன் இருவரும்திருமணம் செய்து கொண்டனர்.