For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு வந்த நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:
ஞசபாநாயகரால் நீக்கப்பட்ட மனோகர் அணியை சேர்ந்த 3 த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள்தங்கள் ஆதரவாளர்களுடனும், நீதிமன்ற உத்தரவுடனும் சபைக்கு வந்ததால்,பாண்டிச்சேரி சட்டசபையில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

கட்சி தாவல் சட்டத்தின் கீழ் 3 த.மா.கா எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் பதவி நீக்கம்செய்யப்பட்டனர். இவர்கள் பதவி நீக்கம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம்தெரிவித்தது.

இதையடுத்து இவர்கள் மூவரூம் நீதிமன்ற உத்தரவுடன் பாண்டிச்சேரி சட்டசபைக்குவந்து சட்டசபை செயலாளர் சிவபிரகாசத்திடம் தங்கள் கட்சி அலுவக சாவியையும்,துணை சபாநாயகர் அலுவலக அறை சாவியையும் கொடுக்குமாறு கேட்டனர்.

சிவபிரகாசம் கட்சி அலுவலக அறை சாவியை கொடுத்தார். ஆனால் துணைசபாநாயகர் சாவியை கொடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கான சில விதிமுறைகள்செயல்படுத்தப்பட இருக்கிறது என கூறினார்.

இதையடுத்து எம்,.எல்.ஏ.க்கள் மூவரும் முதல்வர் அறையில் இருந்த முதன்மைசெயலாளர் ஜோசப்பை சென்று சந்தித்ததனர். ஜோசப் இது குறித்து ஒரு கோப்புசபாநாயகருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் விரைவில் சாவிகள் ஒப்படைக்கப்படும்என்றும் உறுதி அளித்தார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சட்சபை வளாகத்தில்நிறுத்தப்பட்டிருநத் முதல்வரின் காரையும், சபாநாயகரின் காரையும் சூழ்ந்து நின்றுஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.

பின்னர் த.மா.கா எம்.எல்.ஏக்கள் மூவரும் ஆளுநர் ரஜினி ராயை சந்தித்து நீதிமன்றஆணையில் நகல்களை கொடுத்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X