தனியாரை அழைக்கிறது விளையாட்டு அமைச்சகம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
விளையாட்டின் தரத்தை மேம்படுத்த தனியாரும் முன் வரவேண்டும் என மத்தியவிளையாட்டுத் துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாண்டிச்சிரியில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நம் நாடு விளையாட்டில் மேம்பட வேண்டுமானால் அரசு தவிர தனியாரின் ஈடுபாடும்தேவை. இது குறித்து வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இது மாநிலங்கள் குறித்த விஷயம். இதனால் இது குறித்து எல்லா மாநில அரசுகளின்கருத்துகளும் கேட்டு அறியப்படும்.
குஜராத் மக்களுக்கு நிதி உதவி திரட்ட எத்தனையோ பல வழிகள் உள்ளன ஷார்ஜாபோட்டி மட்டும் ஒரே வழியல்ல. நாட்டின் கெளரவம் எல்லாவற்றையும் விடமுக்கியமானது என கூறினார்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications