என் தீர்ப்பில் என்ன தவறு? கேட்கிறார் சபாநாயகர்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனோகர் அணியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களைகட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தது தான் வழங்கிய தீர்ப்புசரியானதுதான் என பாண்டிச்சேரி சபாநாயகர் சுப்ரமணியம் தெரிவித்துளளார்.

பாண்டிச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தது செல்லாது என சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாண்டிச்சேரி சபாநாயகர் கருத்துதெரிவிக்கையில், அரசியல் சாசனத்தில் சபாநாயகருக்கு கொடுக்கப்பட்டுள்ளஅதிகாரத்தின் அடிப்படையில்தான் நான் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்தேன்.நான் செய்தது சரிதான் என்றார்.

இது குறித்து பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் கூறுகையில், சபாநாயகர் அவருக்குள்ளஅதிகாரத்தின் படிதான் தீர்ப்பளித்து, சபாநாயகருக்குள்ள உரிமைையை நிலைநாட்டியுள்ளார். கட்சி மாறுபவர்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் நாடாளுமன்றத்தில்கட்சி தாவல் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்னை பதவி விலகச் சொல்லி எதிர்கட்சியினர் கோருகின்றனர். அவர்களுக்கு வேறுவேலை கிடையாது . நான் பதவி ஏற்றது முதல் என்னை பதவி விலகச் சொல்லி கோரிவருகின்றனர் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+