For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3-வது அணி வரட்டுமே .. எஸ்.டி.எஸ். வரவேற்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைந்தால் அதை நாங்கள் வரவேற்போம் எனமுன்னாள் அமைச்சரும்.புரட்சி தலைவர் அ.தி.மு.க . வின் பொதுச் செயலாளருமானஎஸ்.டி.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் ஈரோடு வந்திருந்தார் அப்போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புரட்சி தலைவர் அ.தி.மு.க. தேர்தலுக்காக அமைக்கப்பட்டது கிடையாது. மக்களுக்குநல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்பட்டது. எங்கள் கட்சியின்கொள்கை நாட்டில் ஜாதி, லஞ்சம் இருக்கக் கூடாது என்பதாகும்.

வரும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக பண்ருட்டி ராமச்சந்திரன்தலைமையில் நாமக்கல் அருணாசலம், வி.வி.சாமிநாதன், ராஜா முகமது ஆகியோரைக்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் நடவடிக்கைகள் குறித்துஆலோசனை செய்வார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும், அண்ணா,பெரியார் கொள்கையிலிருந்து விலகியே இருக்கிறார்கள். இதை மாற்றி அமைத்துமக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம்.

தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது. ஜெயலலிதா போட்டியிடாமல்இருந்தால் நல்லது. அது ஒரு முன் உதாரணமாக அமையும். தமிழ் நாட்டில் மூன்றாவதுஅணி வந்தால் நாங்கள் ஆதரிப்போம் என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X