திமுக அணியில் இணைய மாட்டோம் .. பு.நீதிக் கட்சி
சென்னை:
தமிழ்நாடு ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக முன்னணியுடன் இணையாது எனபுதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துளார்.
சென்னையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழ்நாடு ஜனநாயக முன்னணியில் 6 கட்சிகள் உள்ளன. இந்த முன்னணி தே.ஜ.முன்னணியுடன் இணையும் என்று வரும் தகவல்கள் தவறானவை.
எங்கள் முன்னணி வரவிருக்கும் தேர்தலில் மூன்றாவது அணியாக மட்டுமேபோட்டியிடும். முன்றாவது அணி தான் அடுத்த அரசை அமைக்கப்போகிறது.
த.மா.கா. தலைவர் மூப்பனாரை மூன்றாவது அணிக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளோம். அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
புதிய நீதிக் கட்சியும், கண்ணப்பனால் தொடங்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியும்இணைந்து செயல்பட்டு வருகிறது. நாங்கள் விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரசை மூன்றாவது அணியில் சேரும்படி கேட்டுக்கொள்ளவிருக்கிறோம் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications