வாளையாறுக்கு ஏன் வந்தான் வீரப்பன்?
கோவை:
வெடி மருந்துகளைப் பெற்று கண்ணி வெடி தயாரிக்க கோவை மாவட்டப் பகுதியில்வீரப்பன் பதுங்கினானா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலம், பண்ணாரி காடுகளில் பதுங்கியிருந்த வீரப்பன், தற்போது கோவைமற்றும் கேரள எல்லைப் பகுதியான வாளையார், சிறுவாணி பகுதிகளுக்குவந்துள்ளான்.
இங்கு இடம் பெயர்ந்ததற்குக் காரணம் அதிரடிப்படையினரை எதிர்க்க கண்ணிவெடிகளை தயார் செய்யத் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு வாளையார்மற்றும் கோவை மாவட்டத்தை பொருத்தமான இடமாக வீரப்பன் தேர்வுசெய்துள்ளான்.
கோவையில் கல்குவாரிகள் அதிகமாக உள்ளது. இங்கிருந்து வெடி மருந்துகளைவீரப்பன் வாங்க முயற்சித்துள்ளான். மேலும், மலையோரமாக இருப்பதால், வெளிஆட்களுடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், தனது கூட்டாளிகளின்பலத்தை மேம்படுத்தவும் இந்த தொடர்பு பயன்படும் என எண்ணியுள்ளான்.
ஆனால் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் நடமாட்டம் போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து வாளையார் பகுதியிலிருந்து வீரப்பன் தப்பிச் சென்று விட்டான்.
அவன் தப்பிச் சென்ற இடம் குறித்து தற்போது உரிய தகவல் கிடைக்காததால் போலீசார்பெரும் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications