For Quick Alerts
For Daily Alerts
Just In
போப் உதவியை வி.எச்.பி. நிராகரிக்கவில்லை
சென்னை:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக போப்பாண்டவர் ஜான் பால் அனுப்புவதாக அறிவித்த ரூ. 20 கோடி நிதியைஏற்க மாட்டோம் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் கூறவில்லை என அந்தஅமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் டகோடியா கூறியுள்ளார்.
செனனையில், மகளிர் மாநாடு ஒன்றைத் துவக்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,போப்பாண்டவரின் உதவி, கிறிஸ்த மதமாற்றத்திற்கு வித்திட்டு விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறுதான்மத்திய அரசை சிங்கால் கேட்டுக் கொண்டார். மற்றபடி போப்பின் உதவியை சிங்கால் நிராகரிக்கவில்லை என்றார்டகோடியா.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 10, 2001, 5:30 [IST]