வடகிழக்கில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்பு மறையுமுன் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியாவின் வடகிழக்குமாநிலங்களிலும், வங்கதேசத்திலும் 4.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.50 மணிக்கு வங்க தேசத்திலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம்உணரப்பட்டது. வங்கதேசத்தில் சைல்ஹெட் மற்றும் மைமின்திங் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் அசாமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால்இந்த நிலநடுக்கத்தில் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதும் உடனடியாகமக்கள் அங்கிருந்து வெளியேறி ஓட ஆரம்பித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications