ஆஸி. அணி குறித்துப் பயமில்லை .. கங்குலி
சென்னை:
வெற்றி முகத்தோடு இருக்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாட உள்ள இந்திய அணியை தோற்கடிக்கும் என்ற கேப்டன் ஸ்டீவ் வாஹின் கருத்துபற்றி தனக்கு கவலையில்லை என்கிறார் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி.
சென்னையில் முடிவடைந்த பயிற்சி முகாமிற்கு பிறகு நிருபர்களுடன் பேசிய கங்குலி தெரிவித்த கருத்துகள்:
ஸ்டீவ் வாஹ் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் பற்றி கவலையில்லை. உலகச்சாம்பியனாக வரும் ஆஸ்திரேலியாவை இந்தியா வெற்றி கொள்ளும்.எனினும், வெற்றி பெரும் அணி எது என்பது போட்டி நடைபெறும் போது தெரிய வரும்.
பயிற்சியாளர் ஜான் ரைட்டின் தொழில்முறை பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது பீல்டிங்கில் அதிககவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது என்பது போட்டி நடைபெறும் மைதானத்தை பொறுத்தது. தற்போதைய முகாமிலிருந்து 3 சுழல்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications