கிளின்டன் வருகிறார்
வாஷிங்டன்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அந்த மாநிலத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் வரும் ஏப்ரல்மாத இறுதியில் இந்தியா வருகிறார்.
கிளின்டனின் செய்தித் தொடர்பாளர் ஜூலியா பாய்னா வாஷிங்டனில் இதுகுறித்துக் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் குறித்து அறிந்துகொள்ள கிளின்டன் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வந்த கிளின்டன் இந்தியாவை மிகவும் நேசிப்பதாகக் கூறினார்என்றார்.
அரசியல் பார்வையாளர் ரமேஷ் கபூர் கூறுகையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்க்க கிளின்டன் மிகவும் ஆர்வமாகஇருக்கிறார். ஏப்ரல் மாத இறுதியில் குஜராத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யலாம் என்று தெரிகிறது என்றார்.
முன்னதாக, நியுயார்க்கில் கடந்த பிப்ரவரி 9 ம் தேதி குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வது குறித்து, கிளின்டன் தலைமையில்விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் ரமேஷ் கபூர் கலந்து கொண்டார். இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் கிளின்டன் தொடர்பு கொண்டு பேசியபின்இந்தக் கூட்டம் நடந்தது.
யு.என்.ஐ.