தொட்டிக்குள் இறங்கியவர் விஷ வாயு தாக்கி சாவு
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தொலைபேசி தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இருவர் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
திண்டுக்கல்லில் நாகல் நகரில் ஒரு தொலை பேசி இணைப்புத் தொட்டி உள்ளது. மழைக் காலங்களில் இந்தத்தொட்டிகளில் தண்ணீர் நிரம்பி விடும். மூடப்பட்ட நிலையில் இருந்த இந்தத் தொட்டியில் சமீபத்தில் சாக்கடைநிரம்பியது.
இந்த சாக்கடையை அகற்ற எஸ். வாடிப்பட்டியைச் சேர்ந்த எஸ். நாகராஜன் என்பவர் தொட்டியைத் திறந்துஇறங்கினார். அப்போது வெளிப்பட்ட விஷ வாயுவால் அவர் மூச்சுத் திணறி, மயங்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீரன் எனபவர் சென்றார். அவரும் விஷவாயு தாக்கிமயக்கமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications