அடுத்த குறி இமயமலை
சண்டிகர்:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அடுத்ததாக இமயமலைத் தொடரில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகஉள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்தப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில், அதிக சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொருளாதாரம் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும்என்று பூகம்பவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அடுத்த பூகம்பம் 50 சதவீதம் இமயமலையின் கார்வால் பகுதியில் ஏற்படும்என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குருஷேத்திரா பல்கலைக்கழக பூகம்பவியல் பேராசிரியர் கே.என்.காட்ரியும், டாக்டர் டியோடியாவும் கூறுகையில், இந்தியாவில் அடுத்தபூகம்பம் இமயமலைத் தொடரில் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், அவர்களது உடைமைகள், பொருளாதாரம் ஆகியவற்றில் கடும் சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.இமயமலைத் தொடர் தவிர பசிபிக் பெருங்கடல் வளைவுகளிலும் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.
பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளார்.
1819 ம் ஆண்டு குஜராத் மாநிலம் கட்ச், 1897 ம் ஆண்டு அசாம், 1905 ல் காங்க்ரா, 1934 ல் பிகார் மற்றும் நேபாளம், 1950 ம் ஆண்டு திபெத்மற்றும் அசாம் ஆகியவை. இவைகள் தவிர மிகவும் பெரிய நிலநடுக்கங்கள் 1988 ல் பிகார், 1991 ல் உத்தர்காஷி, 1999 ல் சாமோலி ஆகியஇடங்களில் பூகம்பம் ஏற்பட்டது என்று தெரிவிக்கின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications