நடுக் கடலில் தவித்த பாண்டி. கவர்னர்
பாண்டிச்சேரி:
பெளர்ணமி ஒளியில் நிலாச்சோறு சாப்பிடும் ஆசையில் நடுக்கடலுக்குச் சென்ற புதுவை கவர்னர் ரஜினிராய் கடலில்சிக்கித் தவித்தார்.
கடந்த 7 ம் தேதி தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள். அன்று பெளர்ணமி நாள் என்பதால் பாண்டிச்சேரி கவர்னர்ரஜினிராய் கடலுக்குச் சென்று நிலாச்சோறு சாப்பிட நினைத்தார்.
இதையடுத்து கவர்னர் ரஜினிராயின் குடும்பத்தார் 30 பேர் சேர்ந்து உப்பளம் துறைமுகத்துக்குக் காரில் சென்றனர்.அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சீ கிரஷ் என்ற உல்லாசப் படகில் அனைவரும் சென்றனர். அவர்களுடன் சீகல்ஸ்ஹோட்டலில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளும் ஏற்றப்பட்டன.
சரியாக 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட படகு வீராம்பட்டினம் அருகில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சப்பட்டுநிறுத்தப்பட்டது. படகு நிறுத்தப்பட்டதும் வட இந்திய உணவு வகைகளை சாப்பிட்டனர்.
நடுக்கடலில் கவர்னர் ரஜினிராய் குடும்பத்தினர் நிலாச்சோறு சாப்பிட ஆரம்பத்தினர். அனைவரும் மகிழ்ச்சியுடன்நிலாச்சோறு சாப்பிட்டு முடித்தபின் படகு புறப்பட ஆயத்தமானது. நங்கூரம் கடலில் இருந்து எடுக்கப்பட்டது.அன்று பெளர்ணமி என்பதால் நீர் மட்டம் குறைந்திருந்தது.
படகை இயக்க முயற்சி செய்த போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. படகோட்டிகள் படகை பலம் கொண்டமட்டும் இயக்க ஆரம்பித்தனர். படகு கடலுக்குள் இருந்த கல்லிலும், பாறைகளிலும் இடிபட்டு ஆடத் துவங்கியது.படகு அங்கும், இங்கும் ஆட ஆரம்பித்ததால் படகுக்குள் இருந்த கவர்னர் ரஜினிராய் உள்பட அனைவரும் தடுமாறஆரம்பித்தனர்.
படகின் என்ஜின் பெரிய கல்லின் மீது இடித்ததால் கியர் பாக்ஸ் உடைந்தது. இருப்பினும் படகோட்டிகள் லாவகமாகபடகை செலுத்தி இரவு 1 மணிக்கு படகை உப்பளம் துறைமுகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். படகின் உடைந்தஎன்ஜின் பாகத்தை சரி செய்ய மட்டும் ரூ 3 லட்சம் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications