காரமலையில் வீரப்பன் வேட்டை முடிந்தது
கோயம்புத்தூர்:
வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட தமிழக, கர்நாடக, கேரள கூட்டு அதிரடிப்படை காரைமலைப் பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டது.
கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கேரள மாநிலத்தில் உள்ள காவா, காரைமலை, மலம்புழா, பகுதிகளில் கடந்த 9 நாட்களாக தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட போலீசார் வீரப்பன் கிடைக்காததால் தேடுதல் வேட்டையை நிறுத்தினர்.
எனினும், பாறைபட்டி, வாலையாறு, மற்றும் சிறுவாணி காட்டுப்பகுதியில் தங்கள் தேடுதல் வேட்டையை தொடர்கின்றனர்.
இதனிடையே, கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வீரப்பன் கும்பலிடமிருந்து கைப்பற்றிய டிஜிட்டல் டைரி, மொபைல் போன்ஆகியவற்றை ஒப்படைக்கக் கோரி அதிரடிப்படைக்கு நோட்டீஸ் அளிக்கப் போவதாக வாலையாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிரடிப்படையினர் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து இவற்றை கைப்பற்றி இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
யு.என்.ஐ.