அவசர கோலத்தில் சிகிச்சை
டுகாய் (அஞ்சார்):
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆங்காங்கே அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுஅளிக்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் அவர்கள் அவசர கோலத்தில் சிகிச்சை பெற்றுச் செல்வதால் நோய்கள் ஏற்படும் அபாயம்உள்ளது.
பூகம்பத்தில் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுவதால் அவர்களைக் கூடாரங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தனித்தனியாகமருத்துவ சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. முடிந்தவரை விரைவாக சிகிச்சை அளித்து அனுப்பப்படுகிறார்கள்.
பலர் முழுமையான சிகிச்சைக்கு முன்பே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதையடுத்து பிரசாத் சிகித்ஸா என்ற தனியார் அமைப்புபின் தொண்டர்கள் கட்ச்மாவட்டத்திலுள்ள 30 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அஞ்சார் நகரில் 2 டாக்டர்கள் கொண்ட 20 பேர் கொண்ட மருத்துவக் குழு அங்கு பூகம்பத்தால் காயமடைந்த மக்களுக்கு அனைத்து வகையானஉதவிகளையும் செய்து வருகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications